வசீகர எழுத்தர் ஜாம்பவான் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவலைகள்!!

 
கல்கி

தமிழ் எழுத்துலகில் அழியா புகழ் பெற்றவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. இவர் தம்முடைய எழுத்துக்கள் மூலம் இன்றளவும் வாசகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். இவர் தம்முடைய கற்பனையையும், சரித்திரத்தையு இணைத்து புனைந்த பொன்னியின் செல்வன் வாசகர்களை தவமிருக்க வைத்தது. இந்த நாவலைத் தழுவித்தான் இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரையில் கொண்டு வர பெரும் முயற்சி செய்து வருகிறார். கல்கியின் சரித்திர  மற்றும் சமூக நாவல்கள் என இரண்டு துறையிலுமே அவரின் நூல்கள் இன்றைக்கும் விரும்பி வாசிக்கப்படுபவையாய் இருக்கின்றன. 

கல்கி

புத்தமங்கலத்தில் பிறந்து 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரத்தில் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை போரில் பங்குபெற தன்னுடைய படிப்பை துறந்து சிறை சென்றவர்.கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலில் திரு விகவின் நவசக்தி இதழில் பணிபுரிந்து  பின் ராஜாஜியின்  விமோசனம் பத்திரிக்கையில் எடிட்டராக அமர்ந்தார்.  பின்னர் ஆனந்த விகடன் இதழில் இணைந்து எழுத்து பணியை தொடர்ந்தார்.

அவரின் மனைவி கல்யாணி மற்றும் தன் பெயரை இணைத்து விஷ்ணுவின் அவதாரமான கல்கி என்பதை தன் புனைப்பெயராக சூட்டிக் கொண்டார்.  கல்கி கிறுக்கி தள்ளுவார். தம்முடைய கையெழுத்து குறித்து  நகைச்சுவையாக ,”என் கையெழுத்து போகப்போக கம்போசிடருக்கும்,கடவுளுக்கும் மட்டும் புரியும் படி ஆகி விட்டது !” எனக் கூறியுள்ளார். பொன்னியின் செல்வனில் எக்கச்சக்க முடிச்சுகள்,ஆழ்வார்க்கடியான்,நந்தினி,சேந்தன் அமுதன் என கற்பனை கதாபாத்திரங்களை கலந்து கட்டி எழுதியது வாசகர்களின் மனதில் இன்றைக்கும் நீங்கா புகழ் பெற்றதாக திகழ்கிறது. சமீபத்தில் பொன்னியின் நாடகமாக வெளியிடப்பட்ட போது அதை பல்லாயிரக்கணக்கான  ரசிகர்கள் கண்டு களித்தார்கள். 
சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய இரண்டு நாவல்களும் டி.கே.சியுடன் மாமல்லபுரம் சென்ற போது எழுதியது. அதே போல் சிவகாமியின் சபதம் வானொலிக்கு நாடகமாக எழுதப்பட்டு பின்னர் நாவலாக மாற்றம் செய்யப்பட்டது.  

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை மனதில் கொண்டே பார்த்திபன் கனவில் வரும் சோழ நாட்டு வீரர்களை கல்கி தீட்டினார். பார்த்திபன் கனவு தான்  வரலாற்று நாவல்களில் அவரின்  முதல் படி.பாரதிக்கு மணிமண்டபம் எழுப்ப அவர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். சமூக நாவல்களிலும் தனி முத்திரை பதித்தவர் அவர். அவரின் தியாக பூமி கதை திரைப்படமாக வந்த பொழுது எக்கச்சக்க எதிர்ப்பை சந்தித்தது. படத்தில் இடம் பெற்றிருந்த தேச பக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்ட காட்சிகள் காரணமாக, இந்தப் படத்துக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. தடை உத்தரவு வரப்போகிறது என்பது முந்தியநாளே அறிவிக்கப்பட்டு விட்டதால்  விடிய விடிய இந்த படத்தை மக்களுக்கு இலவசமாகக் காண்பித்தனர். தியேட்டர் முழுவதும் கூட்டம் நிறைந்து வழிய, படம் இடைவிடாமல் காட்டப்பட்டது.

பொன்னியின் செல்வன்
கல்கி கர்நாடகம் என்கிற பெயரில் எழுதிய இசை விமர்சனங்களும் பெரும்  புகழ்பெற்றவை. ஒரு கட்டத்தில் கல்கி ஆனந்த விகடன் இதழை விட்டு விலகி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை சென்றார். பின் கல்கி பத்திரிக்கையை தொடங்க  முடிவு செய்தபோது எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்ததே மீரா திரைப்படம். அப்படத்தில் கல்கி எழுதிய பாடல் தான் காற்றினிலே வரும் கீதம் . கல்கி இதழில் அவர் தீட்டிய சரித்திர நாவல்கள் கல்கி இதழின் விற்பனையை இந்தியாவில் சாதனை படைத்தது. ஒரே நாளில்  எழுபதாயிரம் பிரதிகள் வரை விற்று தீர்ந்தது.  மது விலக்கு,சாதி ஒழிப்பு,காந்திய கொள்கைகள் என்று தன்னுடைய நாவலில் பிரசாரத்தை சேர்த்தே செய்து வந்தார். பொன்னியின் செல்வன்  எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகியும்  அதன் வசீகரம் இன்னும் குறையவில்லை. கல்கியின் இறப்புக்கு பின்  அவரின் அலையோசை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web