அச்சுறுத்தும் மாண்டஸ்!! விமான சேவைகள் ரத்து!!

 
விமானம்

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 85கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே புயல் எதிரொலியாக சென்னை விமானநிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

விமானம்

'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. இந்த மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து நேற்று பகல் 12 மணிக்கு தூத்துக்குடி செல்லும் விமானம், பிற்பகல் 2.25 மணிக்கு சீரடி செல்லும் விமானம், இரவு 7.10 மணிக்கு மங்களூரு செல்லும் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து மாலை 3.35 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானமும், சீரடியில் இருந்து மாலை 6.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு மங்களூரில் இருந்து வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன.  மேலும் சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

விமானம்

இன்று இரவு புயல் கரையை கடக்க உள்ளதால், மோசமான வானிலை, பலத்த காற்று மற்றும் மழை அதிக அளவில் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலின் தக்கம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால் சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

From around the web