BREAKING #: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்!!

மேற்குதிசைக் காற்றின்  வேக  மாறுபாடு  காரணமாக,  நீலகிரி,  கோவை  மாவட்டங்களில்  இன்று  மிக  கனமழை  பெய்யும்  என  சென்னை  வானிலை மையம் தகவல்  தெரிவித்துள்ளது.

 
சென்னை வானிலை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், வடதமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்நீலகிரி  மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர்தென்காசிதிருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்  என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்அதிகபட்ச வெப்பநிலை 36 இருந்து 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 இருந்து 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபடியா நீலகிரி மாவட்டம்  கூடலூர் பஜார் 14 செ.மீயும்அவலாஞ்சியில் 11 செ.மீயும், , மேல் கூடலூரில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

 

மேலும் இன்று ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள்லட்சத்தீவு பகுதிகள்,   வடக்கு  கேரளா  -  கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்  என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

From around the web