திருச்சியில் பிரம்மாண்டமாய்... களத்தில் இறங்கிய அமைச்சர் நேரு! கண்ணீர் விடுகிறது காவிரி பாலம்?!

 
நேரு

திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து  நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு நகராட்சி  நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் இன்று(19.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி மஸ்தான் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா பிரதீப்குமார்,இ.ஆ.ப மாநகராட்சி ஆணையர் திரு.வைத்திநாதன் இ.ஆ.ப , வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு.மு அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள்  மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நேரு

எல்லாம் சரிங்க அய்யா மொதல்ல இந்த காவேரி பாலத்தையும் ஊரு முழுக்க குண்டும் குழியும் இருக்கும் சாலைகளையும் சீர் செய்யுங்க. உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும் என சன்னமாக கூட்டத்தில் இருந்த ஒருவர் நடையைக் கட்டினார்.

பாலம் பராமரிப்பு

நிஜமாகவே... நிஜமாகவே திருச்சி மக்கள் காவேரி பாலம் குறித்து கண்ணீர் வடிக்கின்றனர். நாளொன்றுக்கு அத்தனை வாகனங்கள் கடந்து செல்கிற முக்கிய பாலம் அது.  இதோ... அதோ.. என்று அசுர கதியில் வேலைச் செய்வதாய் சொல்லப்பட்டாலும், இன்னும் தினத்தந்தி கன்னி தீவு போலவே காவேரி பாலத்துக்கு விடியல் கிடைக்காமலேயே இருக்கிறது என்கிறார்கள் திருச்சி  மக்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web