என் பொண்ணைக் காணவில்லை! நடிகை மீராமிதுனின் தாயார் போலீசில் புகார்!

 
BREAKING! நடிகை மீரா மிதுன் கைது! சைபர் க்ரைம் அதிரடி!

நிஜமாகவே நடிகை மீரா மிதுனைக் காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருமாறும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுனின் தாயார் புகார் அளித்துள்ளார். முன்னதாக, நீதிமன்றத்தில், நடிகை மீரா மிதுனைக் கைது செய்ய முடியவில்லை. அவர் தொடர்ந்து இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். குடும்பத்தினரைக் கண்காணித்து வருகிறோம் என்று போலீசார் கூறிய நிலையில், நிஜமாகவே என் பொண்ணைக் காணவில்லை. அவளைக் கண்டுபிடித்து தாங்க என்று மீரா மிதுனின் தாயார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்த நடிகை மீரா மிதுன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அதன் பிறகு சர்ச்சையான கருத்துக்களைக் கூறி, அவ்வப்போது ட்ரோலாகி வந்த மீரா மிதுன், கடந்த ஆண்டு பட்டியலினத்தோரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில்  நடிகை மீரா மிதுன் கைதாகி, சிறையில் இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை மீரா மிதுனும், அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்கும் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தனர். இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெற்ற நிலையில், விசாரணைக்கு நடிகை மீரா மிதுன் தொடர்ந்து நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில், நடிகை மீரா மிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. 

செஞ்சதெல்லாம் மன்னிச்சுடுங்க! நீதிமன்றத்தில் கதறியழுத மீரா மிதூன்!

இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்ற போது நடிகை மீரா மிதுன் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாகவும், அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். போலீசாரின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றம் அதிருப்தியைத் தெரிவித்த நிலையில், கடந்த சில நாட்களாக காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி நடிகை மீரா மிதுனின் தாயார் புகாரளித்துள்ளார். 

நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!!

கடந்த ஆகஸ்ட் மாதம் ஈக்காட்டுத்தாங்கலில் தங்கியிருந்த தனது மகள் மீரா மிதுன், தன்னை அழைத்து போலீசார் கைது செய்ய உள்ளதாக தொடர்ந்து புலம்பி வந்ததாகவும், அதன் பிறகு ஆகஸ்ட்  4ம் தேதி முதல் நடிகை மீரா மிதுனின் செல்போன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web