அதிர்ச்சி!! கேரளாவில் குரங்கு அம்மை நோயால் இளைஞர் உயிரிழப்பு??
கொரோனாவை தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. முதலில் கேரளாவில் நுழைந்த குரங்கு அம்மை, இப்போது தலைநகர் தில்லியையும் எட்டி விட்டது. இந்நிலையில் தமிழகத்திலும் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய குருவாயூரை சேர்ந்த 22 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கடந்த 27ம் தேதி அவர் திரிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சைப்பெற்று வந்த நபரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ல சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது