சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு: மேலும் இருவர் படுகாயம்!!

 
சாலை  விபத்து

ஈரோடு  மாவட்டம்  சித்தோடு  பகுதியை  சேர்ந்த முத்துலட்சுமி, கண்ணன், மற்றும் அவரது  மகன் மெளலி என்பவர்கள் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்தனர்.  காரை குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கார் மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அக்கிரகாரப்பட்டி பாலத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டினரின் கட்டுப்பாட்டை  இழந்து  அருகே இருந்த பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்  முத்துலட்சுமியும் அவரது மகன் மெளளியும் சம்பவ இடத்திலேயே  பரிதாமகாக உயிரிழந்தனர்.   மேலும்   கார் ஓட்டுனர் குணசேகரன், மற்றும்  கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து  சம்பவ  இடத்திற்கு  வந்த  காவல்துறையினர் உயிரிழந்தவர்களின்  உடலை  கைப்பற்றி  பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்து குறித்து  வழக்கு பதிவு செய்த வச்சக்காரப்பட்டி காவல்துறையினர்   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  விருதுநகர் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய் மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web