மருமகள் தலையை வெட்டி எடுத்த மாமியார்!! பகீர் பிண்ணனி!!

 
வசுந்தரா

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டை ராமாபுரத்தில் வசித்து வருபவர் சுப்பம்மா. இவருடைய மகனுக்கும், வசுந்தரா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.சமீப காலமாகவே மாமியார் சுப்பம்மாவுக்கும், மருமகள் வசுந்தராவுக்கும் இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சுப்பம்மா, மருமகள் வசுந்தராவுக்கு தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வசுந்தராவின் குடும்ப உறுப்பினர்கள் சுப்பாவின் வீட்டிற்கு வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

கொலை
தாய் வீட்டு ஆட்களை கூட்டி வந்து மருமகள் வசுந்தரா தன்னை தாக்கியதால் சுப்பம்மா ஆத்திரமடைந்துள்ளார். இது குறித்து வசுந்தராவிடம் நியாயம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கோபத்தின் உச்சிக்கு சென்ற சுப்பம்மா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வசுந்தராவின் கழுத்தை அறுத்து தலையை தனியாக வெட்டி தனியாக எடுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் வசுந்தரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் மருமகளின் தலையை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.

வடமாநிலத்தவர் கொலை
இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் நிலையத்தில் சுப்பம்மா வந்து நின்ற கோலத்தை கண்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவரிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு வீட்டிற்கு சென்று வசுந்தராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் சுப்பம்மா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் இருக்கிறார்.இறைச்சிக் கடையில் ஆட்டின் தலையை வெட்டி எடுப்பது போன்று மருமகளின் தலையை மாமியார் வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web