முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வை கதற கதற அடித்து ரூ1.5கோடியுடன் தப்பி ஓடிய மர்ம கும்பல்!!

 
எம்

 

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியில் வசித்து வருபவர் எஸ்.ஈஸ்வரன் (45). அதிமுகவை சேர்ந்த இவர் கடந்த 2016 முதல் 2021 வரை பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். இந்த நிலையில் தன்னை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்ததில் காயம் ஏற்பட்டதாக கூறி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொள்ளையன் கொலை

இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் கூறுகையில், புஜங்கனூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் ஸ்டேட் பேங்க் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன். சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம் பட்டி பிரிவு அருகே வந்தபோது தன் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஒரு கார் வந்தது. திடீரென இருசக்கர வாகனத்தை வழிமறித்து காரில் இருந்து இறங்கிய 6 நபர்கள் துணியால் கண்ணை கட்டி காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக கூறினார்.

அதன்பின் அரை மணி நேரம் கார் சென்றபின் அடையாளம் தெரியாத ஒரு வீட்டில் வைத்து தன்னை அடித்து துன்புறுத்தினர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் நேரு நகரை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி மிலிட்டரி சரவணன் என்பவர் 3 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தன்னை விடுவிப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினார். பணம் வீட்டில் உள்ளதாக கூறியதால் ஈஸ்வரனை, மிலிட்டரி சரவணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.

பின் வீட்டில் வைத்திருந்த பணம் ரூ.1.50 கோடியை கொடுத்தவுடன் தன்னை விட்டு விட்டு சென்றதாகவும், கடத்திச் சென்ற நபர்கள் தாக்கியதில் கால் தொடை மற்றும் பின் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து பணத்தை பறித்துச் சென்ற கும்பல் மீது பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரோடு

இதற்கிடையில் படுகாயமடைந்த ஈஸ்வரன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web