புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! கனமழை எச்சரிக்கை!!

 
வானிலை

தமிழகத்தில் மாண்டஸ் புயலின் தாக்கமே இன்னும் குறையாத   நிலையில்  அரபிக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதா சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்  செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, கேரளாவின் வடபகுதியில் வளிமண்டலத்தின் மேல் இருக்கு சுழற்சி நிலவுகிறது.

மிக கன மழை!! இந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது!!

இது வடக்கு கேரளா, தெற்கு கர்நாடக கடற்கரை பகுதியில் வழியாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்லும், நாளை தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இதுவரும் தினங்களில் மேற்கு வடமேற்கு திசையில நகர்ந்து இந்திய கடற்பகுதிகளை விட்டு விலகிச்செல்லும். அந்தமான் கிழக்குப்பகுதியில் இருந்து நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி நகர்ந்து அந்தமான் கடல்பகுதிகளின் தெற்குப்பகுதிகளில் நிலவக்கூடும். இதனால் அடுத்த 24 நேரங்களை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

5 மாவட்டங்களில் கன மழை

வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று கூறினார். மேலும், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். சில பகுதிகளில் கனமழை பெய்யும். நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவித்தார்.  

 

From around the web