பெயர், விலாசம் மாற்றம், திருத்தம்... நாளை ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்!

 
ரேஷன்

நாளை தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அட்டைகளில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்த, நீக்க, முகவரி மாற்றம் திருத்தங்கள் செய்ய குறை தீர்க்கும் முகாம் நடைப்பெறவுள்ளது. தற்போது தமிழகத்தில் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் அட்டைகளில் திருத்தங்களைச் செய்வதற்கு நுகர்வோர்களின் வசதிக்காக மாதம் தோறும் பகுதி வாரியாக குறைத் தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.  ரேஷன் அட்டைதாரர்கள் தங்களை குறைகளை ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம்களில் பங்கேற்று தீர்த்துக் கொள்ளலாம்.

குறைதீர்க்கும் நாள்

இந்த முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது.அதன்படி சென்னையில் நாளை நவம்பர் 12ம் தேதியன்று (சனிக்கிழமை) இந்த மாதத்துக்கான பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த குறைதீர் முகாம் பகல் 1 மணி வரை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரேஷன் விரல் பதிவு கைரேகை

இதில் பொது மக்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் மற்றும் புதிய ரேஷன் அட்டை, நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெறலாம். 

வயதான மூத்த குடிமக்கள் முகாமில் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் அவர்களின் அங்கீகாரம் பெற்ற நபரின் மூலம் மாற்றங்களை செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் நாளை நவம்பர் 12ம் தேதி குறைதீர் முகாமை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web