ரஜினி, கமலை எத்தனை முறை பார்த்தாலும் வாவ் சொல்லத் தோணுது.. நடிகை த்ரிஷா பேச்சு!

 
த்ரிஷா

உலகம் முழுக்க ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகை த்ரிஷா பேசும் போது, உணர்ச்சிப்பெருக்கில் இருந்தார்.

பட வாய்ப்புகள் சரியாக இல்லாமல், ஏற்கெனவே நடித்து முடித்த படங்களும் ரிலீசாகாமல் இருக்கும் த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படம், அடுத்து விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பையும் கொண்டு வந்திருக்கிறது.

பொன்னியின் செல்வன்

விழாவில் த்ரிஷா, கண்கள் பணிக்க இயக்குநர் மணிரத்னத்திற்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், இந்தப் படத்தைப் பற்றி நான் கூறும் போது அலாதியான இன்பம் வருகிறது; இந்த வாய்ப்பை அளித்த மணி சாருக்கு நன்றி. இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது முதலில் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார் கமல் சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் வாவ் என்றே சொல்ல வைக்கிறது.

த்ரிஷா

2கே கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்த படம் சிறப்புரிமை, ஆசீர்வாதம், சிறந்த படம் என்று நான் என்ன வார்த்தை கூறினாலும் எனக்கு அது குறைவாகவே தோன்றுகிறது. அதைத் தாண்டி அதற்கு குறைவாகவே தோன்றுகின்றது. அதை தாண்டி உள்ளுக்குள் ஒரு அலாதியான இன்பம் வருகிறது. இந்த வாய்ப்பை கொடுத்த மணி சாருக்கு மீண்டும் மிக்க நன்றி என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web