என் செருப்புக்கு கூட தகுதியற்றவர்!! அண்ணாமலை காட்டம்!! வைரலாகும் ட்வீட்!!
கடந்த மாதம் 13-ம் தேதி வீரமரணம் அடைந்த இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டது. இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த 6 பேர் மீது மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதையடுத்து பாஜகவில் இருந்து மாவட்ட தலைவராக இருந்த சரவணன் விலகினார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, அந்த ஆடியோ தொடர்பாக அண்ணாமலை விளக்கமளத்துள்ளார். அதில், திமுகவினர் ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முன்னோர்களின் பெயரைக் கொண்டு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், அவரது கூட்டமும் வாழ்வதாகவும், ஆகையால், தானாக உருவாகியிருக்கும் ஒரு விவசாயியின் மகனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
You need to understand there are people like us too - who don’t travel in big planes; don’t shut down banks & importantly, have a balanced brain & a life. (3/4)
— K.Annamalai (@annamalai_k) August 31, 2022
மேலும், பெரிய பரம்பரையில், வெள்ளிக் கரண்டியுடன் பிறந்ததைத் தவிர, இந்த ஜென்மத்தில் வேறு எதையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யவில்லை என்றும், அவர் அரசியலுக்கும், மாநிலத்திற்கும் சாபக்கேடு என்றும், இல்லாத ஒன்றை இட்டுக்கட்டும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அளவிற்கு தரம் தாழ விரும்பவில்லை என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார். தனது செருப்புக்கூட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிகரில்லை என்றும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இத்தகைய கீழ்த்தரமான அண்ணாமலையும் மனநலம் குறித்து உயர்நீதிமன்றத்தால் கேள்வி எழுப்பப்பட்ட மற்றொரு நபரும்தான் தமிழ்ச் சமூகத்தின் மீதான சாபக்கேடு என்றும் ஆனால், அந்த சாபம் பாஜகவின் மீது தான் என்றும் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!