அடக்கடவுளே... திருமணத்திற்கு மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீச்சு! இளம்பெண் வெறிச்செயல்!

 
அஞ்சலி

எனக்கு கிடைக்கலைன்னா நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று திரைப்பட பாணியில், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் மீது 5 லிட்டர் ஆசிட்டை வீசி அதிர வைத்திருக்கிறார் அரியானாவைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சலி. 

அரியானா மாநிலம், ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியில் ஷியாம் சிங் (25) என்ற இளைஞர் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். தாய்,தந்தையை இழந்த அவருக்கு அஞ்சலி (23) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இவர்களின் பழக்கம் நட்பாக இருந்த நிலையில், அஞ்சலி, ஷியாம் சிங்கிற்கு தினமும் போன் செய்து பேசி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் அஞ்சலி ஷியாம்சிங்கின் அத்தை வீட்டிற்கு சென்று, தன்னை ஷியாம் சிங்கைத் தனக்குப் பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்து கொடுக்கும் படியும் ஷியாம் சிங்கின் அத்தையிடம் கேட்டுள்ளார். இது குறித்து ஷியாம் சிங்கிடம் அவரது அத்தை கேட்டதும், அதிர்ச்சியடைந்த ஷியாம்சிங், இப்படி திடீரென வந்து திருமணம் செய்து கொள் என்றால் எப்படி சொல்வது? எனக்கு யோசிக்க சிறிது அவகாசம் கொடு எனக் கேட்டுள்ளார். இதற்கிடையில் அஞ்சலி திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது தெரிய வரவே ஷியாம்சிங்கும், அவரது அத்தையும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதல்

இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி, ஷியாம்சிங்கிற்கு போன் செய்து, எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்க மாட்டாய் என்று மிரட்டியுள்ளார். ஆனால் ஷியாம்சிங் அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், வழக்கம் போல அவரது வேலைகளைப் பார்த்து வந்துள்ளார். 

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 26ம் தேதி ஷியாம்சிங் வீட்டில் இருந்து வெளியே வரும் போது அங்கு அஞ்சலி மறைந்திருந்தார். தான் வைத்திருந்த 5 லிட்டர் ஆசிட்டை ஷியாம்சிங் மீது வீசியுள்ளார். ஆசிட் மேல பட்டு உடல் முழுவதும் பரவ தொடங்கியது, ஷியாம் சிங் வலியில் துடித்து ஓட ஆரம்பித்த போதும் அவரை விடாமல், அஞ்சலி  துரத்திய படியே மேலும் ஆசிட் ஊற்றியதால், ஷியாம்சிங்கின் கை, கால், வாய், கழுத்து உள்ளிட்ட பாகங்களின் சதை எரிந்து கீழே விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

காதல்

தற்போது ஷியாம்சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஞ்சலியை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்கள் மீது ஆண்கள் ஆசிட் வீசுவதை நாம் கேள்விபட்டு, அதைக் கண்டிக்கவும் செய்திருக்கிறோம். காதலியோ, காதலனோ எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்கிற காதல் எல்லாம் மலையேறி போய் விட்டது. தற்போது திருமணம் செய்ய மறுத்த ஆண் மீது 5 லிட்டர் அளவுள்ள ஆசிட்டை இளம் பெண் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web