பள்ளத்தில் பாய்ந்த ஆம்னி பேருந்து!! 10 பேர் படுகாயம்!!

 
ஆம்னி பேருந்து

இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.  ஆம்னி பேருந்து பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக லாரி ஒன்று அதிகவேகமாக ஆம்னி பேருந்து மீது மோதுவது போல் வந்தது.

பாம்பன் பாலம் பேருந்து விபத்து
இதனால் திடீரென்று ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் தப்பிப்பதற்காக அலறியடித்துக் கொண்டு வெளியேற முயற்சி செய்தனர்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள், ஆம்னி பேருந்தில் இருந்த (அவசரவழி) எமர்ஜென்சி எக்சிட் வழியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். 

விபத்து

இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மீதமுள்ள மற்ற  பயணிகள் அனைவரும் வேறொரு  மாற்று வாகனத்தில் பெங்களூருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டடனர். தனியார் ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கியது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web