தொடரும் அவலங்கள்!! நிலச்சரிவில் 2 பேர் பலி!! 3 பேர் மாயம்!!

 
நிலச்சரிவு

திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மாயமான அதிர்ச்சி சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை தொடர்ந்து கொட்டி வருகிறது. இதன் காரணமாக மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து பல்வேறு மாவட்டங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றனர்.

நிலச்சரிவு

இந்நிலையில் இன்று காலை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுலா அருகே உள்ள கஞ்சார் கிராமத்தில் அதிகாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவு
மீட்பு பணிகள் குறித்து அப்பகுதி போலீசார் தரப்பில் கூறும்போது, "அதிகாலை 2.30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது சோமன் என்பவரது வீடு நிலச்சரிவில் சிக்கியதால், சோமன் உள்பட அவரது தாயார் தங்கம்மா, மனைவி ஷிஜி, மகள் ஷிமா, மகன் தேவானந்த் என 5 பேரும் மண்ணில் புதைந்தனர். 

இருப்பினும் அவர்களில் தங்கம்மா மற்றும் தேவானந்த் ஆகியோரின் 2 சடலங்கள் மட்டும் தற்போது  மீட்கப்பட்டுள்ளன. மாயமான 3 பேரையும் மீட்கும் பணி துரிதகதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’ என்று கூறினார்கள்.தொடர் கனமழை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web