பூமியை புகைப்படம் எடுத்த ஓரியன் விண்கலம்….! நாசாவின் சோதனை வெற்றி…

 
நாசா

மனிதர்களை   நிலவுக்கு அனுப்புவதற்கான, 'ஆர்டெமிஸ்' திட்டத்தை நாசா துவங்கியது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பவது அந்த திட்டத்தின் இலக்காகும். இதில் முதல்படியாக, மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டது. இந்த திட்டம் 'ஆர்டெமிஸ்-1' என அழைக்கப்படுகிறது. அதன்படி எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்புவதற்கான முதல் முயற்சி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்டது.

அந்தரத்தில் மிதந்தபடியே ஹேர்கட்!! நாசா வெளியிட்ட வைரல் வீடியோ!!

ஆனால் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு, எரிபொருள் கசிவு மற்றும் சூறாவளி தாக்கும் அபாயம் போன்ற காரணங்களால் 'ஆர்டெமிஸ்-1' திட்டம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஓரியன் விண்கலத்துடன் எஸ்.எல்.எஸ். ராக்கெட்டை நாசா   நேற்று நிலவுக்கு அனுப்பியது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல்.எஸ். ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

திடீரென ஏற்பட்ட சட்ட சிக்கல்!! நாசா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முதல் படியான 'ஆர்டெமிஸ்-1' திட்டத்தில் நாசா வெற்றிப்பெற்றுள்ளது. 9 மணி நேர பயணத்திற்கு பின், சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. 1972-ம் ஆண்டுக்கு பின், நிலவுக்கு செல்லும் விண்கலம் ஒன்று பூமியை புகைப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web