வளர்ப்பு பிராணிகள் கடித்தால் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம்! வெளியானது அறிவிப்பு!

 
ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்த நாய்..!!

நம்மளுடைய சுதந்திரம் என்பது அடுத்தவருடைய மூக்கு நுனி வரை தான் என்று புகழ்பெற்ற வாக்கியம் உள்ளது. அடுத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாம நம்ம சுதந்திரத்தை அனுபவிக்கலாம். பாட்டு கேட்க பிடிக்கும் என்றால், அடுத்தவங்க காது செவிடாகிற அளவுக்கு ராத்திரி 10 மணிக்கு மேல அலற விடக் கூடாது. சில பேர் தங்களோட செல்ல பிராணிகளுக்கு ஜிம்மி, ஜாக்கின்னு பேரு வெச்சு, சோறு ஊட்டி காலைல இவங்களோட தொப்பையைக் குறைக்க அதை வாக்கிங் கூட்டிக்கிட்டு போவாங்க. அப்படி கூட்டிக்கிட்டு போறவங்க, அது போற ‘கக்காவ’ கண்டுக்க மாட்டாங்க. அடுத்தவனுடைய வீட்டு முன்னாடி, வெஸ்டர்ன் டாய்லெட் ரேஞ்சுல அசிங்கம் பண்ணிட்டு, அப்பிராணியா அது இடத்தை காலி பண்ணும்.

அறிமுகமில்லாத நாய், கடிக்க பாய்ந்தா, அவன் செல்லமா விளையாடுறான்.. கடிக்க மாட்டான்னு வக்காலத்து வாங்குவாங்க.. உங்களுக்கு தாண்டா அது செல்லம்னு பயத்துல எங்க சொல்றது. இதுக்கெல்லாம் முடிவு கட்டியிருக்கிறது உத்தரபிரதேச மாநிலம். நம்ம 2019ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி நாய்க்கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது. வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பலனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும், கடும் விமர்சனங்களும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரின் மேம்பாட்டு ஆணைய நிர்வாக கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய எடுக்கப்பட்டுள்ளது.

பிட்புல் நாய்

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, நொய்டா நகரில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்போர், அதை நொய்டா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த செல்லப் பிராணிகள் யாரையாவது கடித்தால், அதன் உரிமையாளருக்கு ரூ. 0 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த தொகை, நாய் கடியால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொடுக்கப்படும். அடுத்தாண்டு மார்ச் முதல், இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது. வளர்ப்பு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தாவிட்டால், அடுத்தாண்டு மார்ச் முதல், மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 

பூனை

செல்லப் பிராணிகளின் கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால், அதை சுத்தம் செய்ய வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web