தமிழகத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! இனி இப்படி செய்தா ரூ15 லட்சம் இழப்பீடு தரணும்! அபராதமும் உண்டு!

 
கழிவு நீர் தொட்டி

அடுக்குமாடி குடியிருப்புக்கள் அதிகரித்து விட்ட இக்காலத்தில் வீடுகளின் எண்ணிக்கையும் பெருகிவிட்டது. இதனால் அடிக்கடி வீடுகளில் கழிவுநீர் அடைத்துக் கொண்டுள்ளது. பல நேரங்களில் தனி நபர்களோ அல்லது அப்பார்ட்மெண்ட் சார்பில் குழுவாகவோ கழிவுநீர்  தொட்டி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பல நேரங்களில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்து விடுகின்றனர்.

கழிவு நீர் தொட்டி

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அதன்படி  கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் தனி நபரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால்  அவர்களை அந்த பணிக்கு நியமிக்கும் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களே பொறுப்பு என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மை காலமாகவே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது வேதனை அளிக்கிறது. மேலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதா என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும்  கண்டனம் எழுந்து வருகிறது.

இந்நிலையில் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டி மற்றும் கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபர் நியமிக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை  மாநகராட்சி

அப்படியும் மீறி சுத்தம் செய்ய தனி நபர் நியமிக்கப்பட்டு அவர் மரணமடைந்தால் அதற்கு வீட்டு உரிமையாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் நியமிக்கப்படுவது குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் பொது மக்கள் அறிந்தால் உடனடியாக 14420 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதன் பின்னரேனும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் மனிதர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web