மன்னிச்சுடுங்க... கோவில் நகைகளை த் திருப்பிக் கொடுத்த திருடன்! கடிதம் எழுதியதால் நெகிழ்ச்சி!

 
திருடன் கடிதம்

என்னை மன்னிச்சுடுங்க என்று கடிதம் எழுதியதும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றில் நகைகளைத் திருடிச் சென்ற திருடன், அத்தனை நகைகளையும் திருப்பி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் சாந்திநாத் திகம்பர் பகுதியில் புகழ் பெற்ற ஜெயின் கோவில் ஒன்றுள்ளது. இந்த கோவிலில் இருந்த வெள்ளி மற்றும் தங்க நகைகளைத் திருடன் ஒருவன் திருடி சென்றுயுள்ளான். அவன் திருடிய 4 நாட்களிலேயே அதனைத் திரும்ப கோவிலுக்கு அருகில் வைத்து விட்டுச் சென்றுள்ளான். மேலும் அதனுடன் ஒரு கடிதத்தையும் வைத்துச் சென்றுள்ளான்.

அந்த கடிதத்தில், கோவிலில் இருந்து திருடிய நகைகளினால் தான் தினந்தோறும் பெரும் அவதி அடைந்ததாக தெரிவித்துள்ளான். மேலும் தெரியாமல் நகைகளைத் திருடி விட்டதாகவும் மன்னிப்பு கேட்டுள்ளான். தற்போது இந்த நகை திருட்டு வழக்கை லாம்டா காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

MP

கோவிலில் இருந்து அலங்கார வெள்ளி ஆபரணங்கள், சிலை மேல் வைக்கும் குடை மேலும் சில தங்க ஆபரணங்களைத் திருடியுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னர், கடந்த அக்டோபர் 24ம் தேதி நகைகள் திருட்டுப் போன நிலையில் அடுத்த நான்கே நாட்களில் அக்டோபர் 28ம் தேதி அத்தனை நகைகளையும் மீண்டும் கோவிலுக்குத் திரும்பி கொடுத்துள்ளான். 

ஜெயின் குடும்பத்தினர், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஒரு பை இருப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பையைக் கைப்பற்றிப் பிரித்து பார்த்ததில், அந்த பைக்குள் திருட்டுப் போன கோவில் நகைகளும், திருடன் எழுதியிருந்த கடிதமும் இருந்துள்ளது.

Investigation

மேலும் அதனுடன் இருந்த மன்னிப்பு கடிதத்தில், ‘நான் என்னுடைய செயலுக்காக மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். நான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். நகைகளைத் திருடிய பின்பு நான் பெரும் சிரமத்திற்கு உள்ளானேன்’ என்று எழுதப்பட்டு இருந்தது. கடிதம் மற்றும் நகைகளைக் கையகப்படுத்திய போலீசார் திருடனைத் தேடும் பணியில் தீவிரம் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web