பெற்றோர்களே உஷார்!! பூட்டிய வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட 2 வயது குழந்தை!!

 
குழந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கவர்னர் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு 2 வயதில் பவித்ரா என்ற மகள் உள்ளார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விளையாட்டுத்தனமாக குழந்தை பவித்ரா வீட்டிற்குள் தன்னை தானே தாழிட்டுக் கொண்டார். பின்னர் அதை திறக்க முடியாமல் பயந்து அழத்தொடங்கியுள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

குழந்தை

விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதனால் குழந்தையின் பயம் அதிகரித்து அழுகையை அதிகரித்தது. வீட்டின் உள்ளே நுழைய வேறு எந்த வழியும் இல்லாததால் வீரர்கள் திணறிய நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டனர்.

போலீஸ்

வீட்டில் இருந்த ஜன்னல் கம்பியை அகற்றிய வீரர்கள், அந்த இடைவெளியில் சிறுவன் ஒருவனை உள்ளே அனுப்பி கதவில் போடப்பட்டிருந்த  தாழ்ப்பாளை திறக்க செய்தனர். இதன் மூலம் சிறுமி பவித்ரா பத்திரமாக மீட்கப்பட்டாள். குழந்தை ஓடி வந்து தனது பெற்றோரை கட்டிப்பிடித்து அழுத காட்சி அங்கிருந்த வீரர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டுகளையும், நன்றிளையும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web