பெற்றோர் தொடர்ந்து சண்டை! ப்ளஸ் 2 மாணவி சேலையால் தூக்கிட்டு தற்கொலை!

 
ருத்ரா தேவி

பெற்றோர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால், +2 படித்துக் கொண்டிருந்த மகள் ருத்ர தேவி, சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிர் அருகே பரங்கிப்பேட்டை அகரம் பெரியகோவில் தெருவில் வசித்து வருபவர் ரத்தினம். கட்டிட தொழிலாளியான இவருக்கு ருத்ராதேவி(17) என்ற மகள் உள்ளார். இவர் ஆண்டாள் முள்ளிபள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். 

காதலர்கள் தற்கொலை

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி ருத்ராதேவிக்கு நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில் ரத்தினத்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு தொடர்ந்ததால், மனம் உடைந்த ருத்ராதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலை

இதற்கிடையே வெளியே சென்றிருந்த கணவனும் மனைவியும், வீட்டுக்கு வந்த போது தங்களது மகள், தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவி ருத்ராதேவியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருத்ராதேவி பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web