உச்சம் தொட்ட தங்கம்!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்திற்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்ட பிறகு தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த நாளே இரட்டிப்பு மடங்காக தங்கத்தின் விலை உயர்ந்து விடுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிலும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய கால நேர நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து நகைப் ப்ரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை விரைவில் கிராமுக்கு ரூ.5000யைத் தொட்டு விடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். 

அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிடுகின்றன. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். அதோடு இந்தியாவிலும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் தேவையினை குறைக்கலாம். ஆக இதுவும் அழுத்தத்தினை கொடுத்துள்ளது. 

தங்கம்

இதற்கிடையில் தான் தங்கம் இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.

 தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.30க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

From around the web