டோமினோசுக்கு அபராதம்!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

 
டோமினோஸ்

இன்றைய உணவு பழக்க வழக்கங்களில் தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாகி விட்டது  பீட்சா, பர்கர்.  இவைகளை ஆன்லைன் மூலமும் நேரடியாக சாப்பிடுவதிலும் அதிக ஆர்வம் தற்போதைய இளைய தலைமுறையினருக்கு. வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிடுவதில் இளசுகளுக்கு அலாதி பிரியம். இப்படி டெலிவரி செய்யப்படும் உணவு வகைகளுக்கான கேரி பேக்கை உணவு நிறுவனங்கள் தரவேண்டும் என்பது தான் சட்டம். ஆனால் டோமினோஸ் நிறுவனம் அதற்கு தனியாக பணம் வசூலித்ததால்  அந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பீட்சா
வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரியின் போது கேரி பேக்கிற்கும் சேர்த்து பணம் வசூலித்தது தொடர்பாக டோமினோஸ் நிறுவனத்திற்கு ரூ.8000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக வாடிக்கையாளர் தான் வாங்கும் பொருட்களை கொண்டு செல்ல கடைக்காரரிடம் கேரி பேக் கேட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் வாடிக்கையாளர் ஒருவர் பீட்சாவை ஜூபிலண்ட் புட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ், டோமினோசில் இருந்து பெற்றார். 


அப்போது டெலிவரியில்  வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட பில்லில் கேரிபேக்கிற்கு ரூ.13.33 என விலை அச்சிடப்பட்டு இருந்தது. அந்த தொகை வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்க பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் இமாச்சலப்பிரதேச நுகர்வோர் ஆணையத்திடம் தான் பெற்ற பில்லை ஆதாரமாக வைத்து புகார் அளித்தார். இதனை சிம்லா மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் டாக்டர்.பல்தேவ் சிங், உறுப்பினர்கள் யோகிதா தத்தா மற்றும் ஜக்தேவ் சிங் ரைத்திகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

டோமினோஸ்
இரு தரப்பு விசாரணையின் முடிவில், டோமினோஸ் பீட்சா நிறுவனத்துக்கு நீதிமன்றம் ரூ.5,000 அபராதம் விதித்தது. மேலும் வாடிக்கையாளரின் வழக்குச் செலவு என்று ரூ.3,000 அபராதமும் அவர் செலுத்திய கேரி பேக் விலை ரூ.13.33 என மொத்தம் ரூ.8,013.33 அபராதமாக விதிக்கப்பட்டது. நுகர்பொருள் விற்பனைச்சட்டம் 1935 பிரிவு 36ன் படி, ஒரு நிறுவனம் தனது பொருட்கள் அல்லது உணவுப் பொருட்களை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யும்போது அதனை எடுத்து செல்லும் கேரிபேக்கை இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறுகிறது. இதனை மையமாக வைத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web