மக்களே உஷார்!! இன்று மாலை உருவாகிறது ”மாண்டஸ்” புயல்

 
மாண்டஸ் புயல்

வங்க கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மாண்டஸ் புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னையில் இருந்து 830 கிலோமீட்டர் தொலைவில் இப்புயல் மையம் கொண்டு இருக்கிறது.

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், புயல் கரையை கடக்க கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும்.      இன்று முதல் 10-ம் தேதி வரை அதிக கனமழை பெய்யும்.  என்று தெரிவித்துள்ளது. மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மாண்டஸ் புயல்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை குழுவைச் சேர்ந்த 35 பேர் அதிகாரி சந்திப் குமார் தலைமையில் தயார் நிலையில் உள்ளனர்.  

From around the web