மக்களே உஷார்!! மீண்டும் வெளுத்து வாங்க போகும் கன மழை!! ​​​​​​​

 
வானிலை

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த வெள்ளி கிழமை இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த சூறைக் காற்றும் மற்றும் மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதியில் மரங்கள் சாய்ந்து, மின்கம்பங்கள் இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில்   தமிழகத்தில் வருகிற 13-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை தொடரும்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னை, தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

மாண்டஸ் புயல் கரையைக் கடந்து படிப்படியாக வலுவிழந்து வரும் நிலையில் தற்போது உள் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருவதாகவும் இது வட உள் மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் இதனால் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

From around the web