தனியார் விடுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு!! சென்னையில் பரபரப்பு!!

 
பெட்ரோல் குண்டு

சென்னை வடபழனி கங்கப்பா நாயுடு தெருவில் வசித்து வருபவர் தமீம் அன்சாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அதே பகுதியில் எம்.ஆர்.எம். ரெசிடெண்ட்ஸ் என்ற பெயரில் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் விடுதி இயங்கி வந்தது.

தனியார் விடுதிக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு!! சென்னையில் நடந்த பயங்கரம்

அப்போது இரவு 9 மணி அளவில் மோட்டர் பைக்கில் வந்த இருவர் திடீரென கையில் வைத்திருந்த 2 பெட்ரோல் வெடிகுண்டுகளை விடுதிக்குள் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அப்போது பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் வரவேற்பு அறை, கண்ணாடி சேதமடைந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து தமிம் அன்சாரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வளசரவாக்கம் உதவி ஆணையர் மற்றும் விருகம்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் தாம்சன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். 

போலீஸ்

மேலும் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து இரண்டு காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து லாட்ஜின் வரவேற்பு அறையில் தூக்கி வீசுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதில் பதிவான முக அடையாளங்களை வைத்து விருகம்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web