ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!! இலங்கையில் முதலீடு செய்ய தயார்!! கதறும் நித்தியானந்தா!!

 
நித்தியானந்தா

பாலியல் வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.

நித்தியானந்தா

அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்த அவர், கடந்த சில வாரங்களாக செயல்படாமல் இருந்தார். இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் பீதி கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.இதையடுத்து உடல் நலக் குறைவில் இருந்து மீண்டு வந்து சத்சங்கம் நடத்தி வந்த நித்திக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக இலங்கை அரசை நாடியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

நித்தியானந்தா

இதுகுறித்து கைலாசா வெளியுறவுத் துறை அமைச்சர் என சொல்லப்படும், நித்யபிரேமாத்ம ஆனந்த சாமி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இந்து மதத்தின் உயர்ந்த தலைவர் நித்யானந்தா சுவாமிக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. தற்போது, கைலாசாவில் உள்ள மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதிகள் அந்தளவுக்கு இல்லை. அவர் உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது. நித்யானந்தாவின் தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு இலங்கையில் உடனடியாக தஞ்சமடைய அனுமதி வழங்கி மருத்துவ சிகிச்சைகளுக்கும் அனுமதியுங்கள்.

கைலாசாவிலிருந்து அவரை விமான ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்து மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யுங்கள். நாங்கள் நித்யானந்தாவுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ கருவிகள் வாங்க தயாராக உள்ளோம். அவரது மருத்துவ சிகிச்சைக் கட்டணம் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நித்யானந்தாவிற்கு இலங்கையில் திரும்பபெற முடியாத தஞ்சம் வழங்கினால், அவர் இலங்கையில் முதலீடு செய்ய தயாராக உள்ளார்” என்று கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web