கவிஞர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை! அதிர்ந்த திரையுலகம்!

 
தூரிகை

நடிகர் ஜி.வி. பிரகஷ் உட்பட திரையுலகில் பலருக்கும் பிரபல காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வந்தார் தூரிகை. பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள். இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யின் ‘ஆல் தோட்ட பூபதி‘ பாடலின் மூலம் பாடலாசிரியர் கபிலன் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார். அதைத்தொடர்ந்து கமலின் ‘தசாவதாரம்‘ படத்தில் ஒரு வேடத்திலும் நடித்திருப்பார். மிஷ்கினின் நண்பரான கபிலன் தற்போது வெளிவர  உள்ள ‘பிசாசு 2‘விலும் பாடல்களை எழுதி இருக்கிறார்.

தூரிகை  கபிலன் தற்கொலை

பாடலாசிரியர் கபிலனுக்கு 27 வயதில் தூரிகை என்ற மகள் இருந்தார். இவர் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்தார். அதன் மூலம் ஜி.வி.பிரகாஷ், சேரன் உள்பட திரையுலகினர் பலருக்கும் காஸ்ட்யூம் டிசைனராகவும், சில கான்சப்ட் ஷ¨ட்களிலும் பணியாற்றியிருக்கிறார். மேலும் பீயிங் வுமன் என்ற பிரபல இணைய இதழையும் நடத்தினார்.

தூரிகை

இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் அரும்பாக்கத்தில் தனது வீட்டில் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண்ணியவாதியான தூரிகையின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web