விஷமாகும் உணவு!! குளிர்பானம் குடித்த சிறுவன் ஓடும் பேருந்தில் மரணம்!! தொடரும் சோகம்!!

 
குளிர்பானம்

சென்னை மயிலாப்பூர் பி.வி.கே.தெருவில் வசித்து வருபவர் ஜெபஸ்டின்ராஜ். இவருக்கு 14 வயதில் அந்தோணிஜான் லோஷன் என்ற மகன் இருந்தார். அதே பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.இந்நலையில் ஜெபஸ்டின்ராஜ் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுவிட்டு அரசு பேருந்தில் மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பேருந்து மதுரை பேருந்து நிறுத்தம் அருகே சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது சிறுவன் அந்தோணி ஜானுக்கு, அவரது தந்தை ஜெபஸ்டின்ராஜ் அங்கிருந்த கடையில் சிப்ஸ் மற்றும் கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை ஆசையாக சாப்பிட்ட சிறுவன் அந்தோணி சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர் அந்தோணி ராஜூக்கு தண்ணீர் கொடுத்து விட்டு பஸ்சில் உறங்க வைத்தனர். 

குளிர்பானம்

பேருந்து திண்டிவனம் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது சிறுவனை குடும்பத்தினர் எழுப்பினர். ஆனால் அந்தோணிராஜிடம் எந்த அசைவும் இல்லாததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து சிறுவன் அந்தோணி ராஜை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அந்தோணி ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதைக்கேட்ட குடும்பத்தனர் கதறி அழுதனர்.

இது குறித்த தகவல் திண்டிவனம் போலீசாருக்கு கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, ‘‘உலகம் முழுவதிலம் குளிர்பானங்களால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரளமாக இருப்பதாக கூறுகின்றனர். மேலும் நாளன்றுக்கு 3 லிட்டர் வரை குளிர்பானங்கள் அருந்தினால் அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குளிர்பானம் ஜூஸ் பழச்சாறு

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் பல விற்பனை செய்யப்பட்டுதான் வருகின்றன. பல்வேறு நிறங்களில் நாக்கின் சுவையை தூண்டும் வகையில் தயாரிக்கப்படும் இதுபோன்ற குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் பழரசங்களை அருந்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.பேருந்து நிலையத்தில் கூல்டிரிங்ஸ் குடித்த 14 வயது சிறுவன் ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web