தற்கொலை செய்து கொண்ட காவலர்! ஊருக்குள் உடலைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

 
பிரபு

திருப்பத்தூர் மாவட்டம் இருனாபட்டு ஊராட்சி திருவிக நகரைச் சேர்ந்தவர் பிரபு. சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சிட்டி ஏஆர் காவலராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் பகுதியைச் சேர்ந்த வசு என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கிஸ்மிதா என்கிற ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பிரபு திடீரென நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று அவருடைய சொந்த ஊரான இருனாபட்டு திருவிக நகருக்கு உடலை எடுத்து வந்துள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் தற்கொலை செய்து கொண்ட பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை இங்கே எடுத்து வரக்கூடாது அது எங்கள் ஊருக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளனர். மேலும் இறந்து  போன காவலரின் உடலை ஊருக்குள் விடாமல் சுமார் 2 மணி நேரமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பிரபு

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், சக காவலர்கள் உதவியுடன் அப்பகுதி மக்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

பிரபு

இதையடுத்து பொதுமக்கள் சமரசம் ஆன நிலையில், ஊருக்கு வெளியே சடலத்தை வைத்து ஈமச்சடங்குகளை செய்து அருகே உள்ள சுடுகாட்டில் காவலர் பிரபுவின் உடல் புதைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web