பொன்னியின் செல்வன் பட நடிகைக்கு நேர்ந்த மோசமான அனுபவம்!! மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!!

 
ஐஸ்வர்யா லட்சுமி

பொன்னியின் செல்வன் படத்தில்  பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்ய லட்சுமி ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்டுள்ளார். மலையாளத்தில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, 'மாயாநதி'படம் மூலம் மலையாளம் தாண்டி, பிற மொழி சினிமா ரசிகர்களையும் ஈர்த்தார். தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷூடன் 'ஜெகமே தந்திரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, புத்தம்புது காலை, கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஐஸ்வர்யா லட்சுமி

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக அவரது பூங்குழலி கதாபாத்திரம் மற்றும், .ஆர். ரகுமான் இசையில் அமைந்த 'அலைகடல்'பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.  இதனிடையே விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி' படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியான நிலையில், குஸ்தி வீராங்கனையாக நடித்துள்ள அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில்   ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் தன்னை தவறாக தொட்ட நபரை அடித்ததாகத் தெரிவித்துள்ளார். "நகைச்சுவையை மையமாக வைத்து தயாரான எந்தப் படத்திலும் இதுவரை நடிக்காமல் இருந்த எனக்கு முதல் தடவையாக 'கட்டா குஸ்தி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் எனக்கு ஒரு சவாலாகவும் இருந்தது.  

ஐஸ்வர்யா லட்சுமி

குஸ்தி வீராங்கனையாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். என் பாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்திருக்கிறேன். ஏற்கனவே ஒருவரை நான் அடித்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் என்னை தவறாகத் தொட்டார். அதனால் அடித்து விட்டேன்.   என கூறினார். எல்லா பெண்களும் தங்கள் வாழ்க்கையில் மோசமான தொடுதல்களை எதிர்கொள்வார்கள். பேட்  டச் இன்னும் ஒரு பிரச்சனை. குருவாயூரில் சிறுவயதில் இப்படி ஒரு சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது. கோயம்புத்தூரில் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போதும் அப்படித்தான் நடந்தது. இப்போது அப்படி ஏதாவது நடந்தால் நான் எதிர்வினையாற்றுவேன். ஆனால் சிறு வயதில் எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை ஐஸ்வர்யா லட்சுமி என கூறினார்.

 

From around the web