பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு!! வெளுத்து வாங்கும் கனமழை!!

 
கல்லூரி மாணவிகள்

தமிழகத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது . இதன் காரணமாக இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

இதன் அடிப்படையில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வட தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று  பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web