கருக்கலைப்பு செய்த போது கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!! உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!

 
கர்ப்பிணி


தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் திடீரென்று உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.தியாகதுருகம் அருகே கூவாடு கிராமத்தில் வசித்து வந்தவர் பெரியநாயகம். திருமணமான இவருக்கு ஏற்கனவே 2 மகன்களும், ஒரு மகளும் உள்ள நிலையில் அவர் மீண்டும் கருத்தரித்தார். இதனால் அதனை கலைக்க முடிவு செய்து தனியார் மருத்துவமனையை நாடினார். இதைத்தொடர்ந்து பெரியநாயகத்துக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதன் பின்னர் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

dead body

பெரியநாயகம் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் கலைத்து சென்றனர். பலியான பெண் பெரியநாயகியின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

கருக்கலைப்பின் போது உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிர் பலி ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கருக்கலைப்பு செய்வதற்காக தனியார் மருத்துவமனைக்கு வந்த 3 குழந்தைகளின் தாய் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web