ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு...!
Updated: Mar 4, 2022, 10:01 IST
தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக ஒருங்கிணைந்த பால்வளத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது.
1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515-ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரு.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குல்பி ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும். 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த பால்வளத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

