பிரதமர் மோடி பிறந்த நாள் விழா! குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு!

 
மோடி

இந்திய பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று ராயபுரம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 2 கிராம் தங்க மோதிரம் பரிசளித்து பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளை பா.ஜ.க.வினர் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பெயரில் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க காசுகள் பரிசளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும் போது, ‘‘சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள ஆர். எஸ். ஆர். எம்  அரசு மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 2 கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மருத்துவமனையில் இன்று குழந்தை பெற உள்ள கர்ப்பிணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி இன்று 10 முதல் 15 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதி மக்களுக்கு 720 கிலோ அளவுக்கு மீன் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.

பாஜக எல்.முருகன்

இந்தியா முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கொண்டாடப்படாமல் இருந்தது. அவற்றுக்கு எல்லாம் சேர்த்து இந்த ஆண்டு கொண்டாடிவிட பா.ஜ.க.வினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி நாடு முழுவதும் இரண்டு வாரங்கள் ( 15 நாட்கள் ) வேற்றுமையில் ஒற்றுமை என்கிற பெயரில் சேவை வாரமாக கொண்டாடப்பட உள்ளது.
நாட்டின்  பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணிகள், மாரத்தான் போட்டிகள், மருத்துவ முகாம்கள், அன்னதானம்,  நலத்திட்ட உதவிகளை நடத்த பா.ஜ.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். 

தமிழக அரசுக்கு எதிராக போராடும் பா.ஜ.க அண்ணாமலை..!!
அதே போன்று தமிழக பா.ஜ.க. சார்பிலும்  மாநிலம் முழுவதும்  மாரத்தான் போட்டி,  கபடி போட்டி,  மாட்டு வண்டி போட்டி, கடற்கரையை சுத்தம் செய்யும் தூய்மை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செயப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டங்களிலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக பா.ஜ.க.வினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web