தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதல்!! 5 பேர் பலி!!

 
விபத்து

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதில் 5 பேர் பயணம் செய்து கொண்டருந்தனர். கொடுவாய் காக்காபள்ளம் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.அதன் எதிர்திசையில் திருப்பூரில் இருந்து பழனி நோக்கி தனியார் பேருந்து ஒன்று கார் மீது பலமாக மோதியது. நேருக்கு நேர் மோதிய இந்த பெரிய விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது காரில் இருந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விபத்து
அப்பளம் போல நொருங்கிக் கிடந்த காரின் பாகங்கள் சாலையில் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டு கிடந்தது. காரில் பயணத்தவர்களும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சிதறிக் கிடந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி அனைவரையும் பதறச் செய்தது.தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த மகேஷ் மற்றும் கிஷோர் ஆகிய 2 பேரை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மகேசும், கிஷோரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து

ஏற்கனவே உயிரிழந்த வீரக்குமார், முருகேசன் மற்றும் சஜீத் ஆகியோரின் உடல்கள் பிரேதனை பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்பது தெரிய வந்துள்ளது.சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web