அதிர்ச்சி!! பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி!!

 
பிரியங்கா  காந்திக்கு  கொரோனா

கடந்த சில மாதங்களாக நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கையும், பரிசோதனைகளும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சில நாட்களில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

லேசான அறிகுறிகளுடன் காய்ச்சலால் அவதிப்பட்ட பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்இந்நிலையில் இன்று பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்திக்கு 2 மாத இடைவெளியில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கட்சிக்குள் பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் அவருடன் சமீப காலமாக தொடர்பில் இருந்த கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

From around the web