குற்றாலத்தில் நீடிக்கும் தடை!! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

 
குற்றாலம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் குற்றாலம் தென் தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 160 மீ   உயரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசமாக விளங்குகிறது. இந்த அருவியில் அழகை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். மேலும் அருவியில் குளித்து மகிழ்வர்.

குற்றாலம்

இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே மெயின் அருவியை தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து கடந்த 1-ம் தேதி சீரானது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

குற்றாலம்

இந்த சூழலில்  நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்   சுற்றுலா பயணிகள் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

From around the web