தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு!! கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு!!

 
இறையன்பு


அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர்கள் அனைவரும் உரிய காலத்தில் அவர்களுக்கான பதவி உயர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக அரசு
இது குறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறும்போது, ‘‘தகுதியுள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். மேலும் செயற்கையான பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது என்றும், இதன் காரணமாக பதவி உயர்வு பெற்று முழு சேவை செய்யாமலேயே பண பலன்களை சிலர் பெற்று வருகிறார்கள் என்றும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அரசு ஊழியர்கள்

எனவே இவற்றை தடுக்கும் பொருட்டு அரசு ஊழியர்களின் பணிகாலத்தின் போதே முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே முறைகேடுகளை தவிர்க்க முடியும். இது குறித்த உத்தரவை அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களின் செயல் இனிபலிக்காது என்றும், தகுதியுள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெறுவார்கள் என்றும் பொது நல ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web