மக்களே உஷார்!! இன்று முதல் 3 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை!!

 
5 மாவட்டங்களில் கன மழை

தமிழகத்தில் கடந்த மாதத்தில் பரவலாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகள் நல்ல மழையை பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

மழை

அதில் இன்று ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24 வரை மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகம் , புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மழை


 ஆகஸ்ட் 25ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக  36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web