நடிகர் சூர்யா 2D அலுவலகம், கலைப்புலித்தாணு உட்பட 40 இடங்களில் ரெய்டு!! திரையுலகில் பரபரப்பு!!

 
சூர்யா

தமிழகத்தில் அதிரடியாக  சினிமா தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் வீடுகளில் இன்று அடுத்தடுத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை  5 மணிக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. சென்னை மற்றும் மதுரையில் அவருக்கு சொந்தமான 40 இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.

கலைப்புலி தாணு, அன்புச்செழியன்

ஏற்கனவே 2020ல் அன்புசெழியன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில்  கணக்கில் வராத ரூ 77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராத பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சமீபத்தில் இவரது இல்லத்திருமண விழாவில்  மொத்த திரையுலக பிரபலங்களும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தமிழிலில் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். சினிமா உலகில் இவரிடம் கடன் வாங்காத ஆட்களே கிடையாது என சொல்லும் அளவிற்கு பலர் இவரிடம் கடன் வாங்கி உள்ளனர்,

திமுகவை அடுத்து அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் ரெய்டு!

இவரைத் தொடர்ந்து  கலைப்புலி எஸ் தாணு வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து  Studio Green தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவின் உறவினருமான எஸ். ஆர் பிரபுவின் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. இந்த திடீர் ரெய்டு காரணமாக மொத்த கோலிவுட்டும் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மற்ற தயாரிப்பாளர்கள் பலர் பதற்றத்தில் உள்ளனர்.மொத்த கோலிவுட் வட்டாரமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web