மலேசிய காதலியை கரம் பிடித்த ராமநாதபுரம் இளைஞர்..! உறவினர்கள் உற்சாகம்...

 
அருண்செல்வம்

திருமணம் என்பது சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இங்கு தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு மலேசியாவில் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளைமடத்தைச் சேர்ந்தவர் அருண்செல்வம். இவர் மாலத்தீவில் ஹோட்டலில் வேலைப்பார்த்து வந்தார்.  அப்போது அங்கு மேலாளராக பணிபுரிந்த மலேசிய பெண் யீஷ்யானுடன் நட்பாக பழகி  வந்துள்ளார். நாளடைவில் யீஷ்யானும் அருண்செல்வமும் காதலர்களாக மாறியுள்ளனர்.   இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர்.

திருமணம் கல்யாணம் கும்பம்


இவர்களது திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து  இந்திய கலாசாரத்தின் மீது விருப்பம் கொண்ட யீஷ்யான் தமிழகத்தில் திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதால் இரண்டு குடும்பத்தார் சம்மதத்துடன் அருண்செல்வத்தின் சொந்த ஊரான ராமநாதபுரத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைப்பெற்றது. இந்து முறைப்படி அருண்செல்வம் யீஷ்யான் கழுத்தில் தாலி கட்டி தனது மனைவியாக்கிக் கொண்டார்.
 

5வது திருமணம்

பின்னர் மணமகன் செண்டை மேளம் இசைக்க, மணமகள் சிங்கியும் இசைத்து மகிழ்ந்தனர். இவர்களது திருமணத்தை கண்டு மகிழ்ந்த குடும்பத்தினர் மணமக்களை வாழ்த்தினர்.     

From around the web