காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்தும் விலகிய ரவீந்திர ஜடேஜா..!!

 
ரவீந்திர ஜடேஜா

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் மொத்தம் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றன. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதையடுத்து, ஹாங் காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், வலது கால் மூட்டில் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகினார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஜடேஜா 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இந்நிலையில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் தற்போது அணியில் அக்சர் படேல் அணியில் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திலும் காயம் காரணமாக அவர் விலக நேரிட்டது

அக்சர் படேல், ஜடேஜாவைப் போன்றே இடது கை ஆட்டக்காரரும், இடது கை சுழற்பந்து வீச்சாளரும் ஆவார்ஜடேஜா தற்காலிக விலகல் அணிக்கு பின்னடைவு என்றாலும்  இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது.இந்நிலையில் டி20 உலக கோப்பை அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கு பயிற்சிக்களமாக ஆசிய கோப்பை இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில்  கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற  ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து இந்தியா ஆசிய கோப்பையை வென்றது. இதே போன்று கடைசியாக நடைபெற்ற தொடரிலும் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றது. தற்போது இந்தியா எட்டாவது முறையாக இந்த தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

From around the web