பட்டாகத்தியுடன் ரீல்ஸ்!! வாலிபருக்கு பாடம் புகட்டிய போலீஸ்!!

 
அஜித்குமார்

இன்ஸ்டாகிரம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்ஸ் மற்றும் லைக்குகளை பெறுவதற்காக பலர் நடனம் ஆடுவது, பாடல் பாடுவது போன்ற தங்களின் தனி திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் ரயில் முன்பு நின்று ரீல்ஸ் செய்வது, பட்டாகத்தியுடன் வசனம் பேசுவது போன்ற விபரீதங்களையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் பட்டாகத்தியை சுழற்றி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளம்

மதுரையைச் சேர்ந்த சில இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் விடியோ பதிவிட்டு வந்தனர். இதனடிப்படையில் மதுரையைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் சமீபத்தில் பெரிய வாளுடன் ரீல்ஸ் விடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், சினிமா பாணியில் நடனம் ஆடி சட்டையிலிருந்து பட்டாகத்தியை எடுத்து மிரட்டுவது போல் விடியோ இருந்தது.  இந்த வீடியோ வைரலான நிலையில் போலிசார் விசாரணையில் இறங்கினர்.

இளம் நடிகர் கைது

அதன்படி பட்டாகத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட அஜித்தை போலிசார் கைது செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.  இதனை அறிந்துக் கொண்ட அஜீத்    தலைமறைவாகினார். இந்நிலையில், தனிப்படை போலீசார் அஜித்குமார் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர். அஜித் குமார் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது

From around the web