அந்தரங்க புகைப்படங்களை அழிக்க மறுப்பு! காதலனுடன் ரகசிய திருமணம்! காதலி பகீர் வாக்குமூலம்! தாயும், மாமாவும் கொலைக்கு உடந்தை!

 
கிரீஷ்மா

தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்து, விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து காதலியே கொலைச் செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலி விஷம் கொடுத்து கொலைச் செய்வதற்கு கிரீஷ்மாவின் தாயாரும், மாமாவும் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிரீஷ்மாவின் தாயாரையும், மாமாவையும் கைது செய்துள்ள போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலத்தின் பாற சாலையை அடுத்த மூரியங்கரைப் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் சாரோன் ராஜூக்கும் பளுகல் ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கரிஷ்மாவுக்கும் கல்லூரிக்கு தினந்தோறும் செல்லும் வழியில் காதல் ஏற்பட்டது.  இந்த காதல் ஜோடி, தினந்தோறும் ஊர் சுற்று, உல்லாச பறவைகளாக அவ்வப்போது தனிமையில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கிரீஷ்மாவுக்கு வீட்டினர் மாப்பிள்ளைத் தேடி, வேறு ஒருவருடன் நிச்சயம் செய்தனர்.  இது பற்றி காதலனிடம் கூறி, தன்னை மறந்து விடும்படி கிரீஷ்மா கூறியதைக் காதலன் ஏற்காததால், காதலனை தனது வீட்டிற்கு அழைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து, கொலைச் செய்துள்ளார்.

கிரீஷ்மா

சாரோனின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தியதில், தனது காதலனை விட்டு விட்டு வேறு ஒருவருடன் திருமணத்திற்கு தயாரானதைத் தொடர்ந்து கிரீஷ்மா தனது வீட்டுக்கு காதலனை அழைத்து விஷம் கொடுத்துக் கொன்றது வெளியானது. இதனையடுத்து கிரீஷ்மா கைது செய்யபட்டார்.

தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் கிரீஷ்மா அளித்துள்ள வாக்குமூலங்கள் பகீர் ரகத்தைச் சேர்ந்தவை. விசாரணை கைதியாக நெடுமங்காடு காவல் நிலையத்தில் இருக்கும் போது கழிவறையில் இருந்து கிருமி நாசினியைக் குடித்து கிரீஷ்மா, தற்கொலை முயற்சி செய்து  திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், மாஜிஸ்திரேட் மருத்துவமனைக்கு சென்று வாக்கு மூலம் பெற்று பதிவு செய்துள்ளார்.

கிரீஷ்மா

காதலன் இறந்ததும், மர்ம மரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், கிரீஷ்மா விஷம் கலந்து கொடுத்த பாட்டில்கள் உள்ளிட்ட தடயங்களை அவரது தாயாரும், தாய் மாமன் நிர்மல் குமாரும் அழித்துள்ளதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 

பல வருடங்களாக காதல் ஜோடிகளாக திரிந்த இருவரும் சேர்ந்து தனிமையில் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை அழிப்பதற்கு காதலன் மறுத்ததால், எங்கே அந்த புகைப்படங்களை ஆதாரமாக காட்டியோ, இணையதளங்களில் வெளியிட்டோ திருமணத்திற்கு மறுத்த தன்னை காதலன் பழிவாங்க கூடும் என்கிற எண்ணத்தில், காதலனையே கொலைச் செய்ததாக கிரீஷ்மா போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web