மாண்டஸ் புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்!! அமைச்சர் அறிவிப்பு!!

 
அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

மாண்டஸ் புயல், மழையின் விளைவாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்  என்று அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

மாண்டஸ் புயல்

பின்னர்    செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மாண்டஸ் புயலினால் 5 பேர் உயிரிழந்ததோடு, 98 கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. அதன் பிறகு 138 குடிசைகள் மற்றும் 18 வீடுகள் பகுதி அளவிலும், 25 குடிசைகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து 40 விசைப்படகுகள் மற்றும் 24 படகுகள்,‌ 2 பைபர் படகுகள் போன்றவைகளும் புயலினால் சேதம் அடைந்துள்ளது.

அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

இந்நிலையில் புயலினால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு சேதமடைந்த வீடுகள் மற்றும் படகுகளுக்கும் முதல்வரின் ஆலோசனைப்படி நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.  இந்த இழப்பீட்டு தொகையை அதிகரித்து அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

From around the web