நெகிழ்ச்சி! தாய்க்கு 2வது திருமணம்! கைப் பிடித்து கணவனைப் பரிசளித்த மகள்!

 
பிரசிதா ரதிமேனன்

59வது வயதில், தாய்க்கு துணை வேண்டும் என்பதை உணர்ந்து, மறுமணத்திற்கு சம்மதிக்க வைத்து, திருமணத்தையும் நடத்தி வைத்த மகளை நெகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள் திருச்சூர் மக்கள். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரதி மேனன் (59). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணமான நிலையில், ரதி மேனன் தனிமையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதி மேனனின் மகள் பிரசிதா, கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினார்.  இதற்காக தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று முடிவு செய்த அவர், தாய்க்கு தகுந்த மணமகனை தேட தொடங்கினார். இந்த சூழ்லில் அதே பகுதியைச் சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் (63) என்பவர் தான் தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதா முடிவு செய்தார். 

திருமணம்

வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற திவாகரனிடம் தனது தாயின் தனிமை பற்றியும், அவருக்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று உருக்கமாக கூறினார் பிரசிதா. இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திவாகரனின் மனநிலை குறித்து அவரது 2 பெண் குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. 

இதை தொடர்ந்து, தனது தாய் ரதி மேனனின் சம்மதத்தை பெற்ற அவர் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தார். அதன்படி உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்தார். 

திருமணம் கல்யாணம் கும்பம்

இதுகுறித்து பிரசிதா கூறுகையில், எனது அம்மாவுக்கு நாங்கள் 2 பெண் குழந்தைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார். எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web