தொடரும் சாலை விபத்துகள்!! சென்டர் மீடியனில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தம்!!

 
எல்.இ.டி.

போக்குவரத்து காவல்துறையினர் சாலை விதிமுறைகளை கடுமையாக்கினாலும் அபராதம் விதித்தாலும் தமிழகத்தில் ஆங்காங்கே தினமும் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்க சாலைகளின் சென்டர் மீடியனில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தம் பணியை போக்குவரத்து காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

விபத்து

இந்நிலையில் சென்னையில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை குறைத்து, உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனிடையே இரவு நேரங்களில் சாலைகளின் நடுவே இருக்கும் சென்டர் மீடியன் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு தெரியாமல் போவதால், அதன் மீது சில வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

எல்.இ.டி விளக்கு

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்டர் மீடியனில் மோதி ஏற்பட்ட விபத்துகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் விதமாக, சென்னையில் விபத்து ஏற்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்குள்ள சாலைகளின் சென்டர் மீடியனில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தம் பணியை போக்குவரத்து காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக கத்திப்பாரா பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர்.

 

From around the web