ரூ50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை, சுறாத் துடுப்புக்கள் கடத்தல்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
கடல் அட்டை

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள சல்லித்தோப்பு கடற்ரைபகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சுறா மீன் துடுப்புகள் நாட்டு படகில் வைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனையிட்ட போது அங்குள்ள தென்னந்தோப்பு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட சுறா மீன் துடுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் ஆகியவை மூட்டை மூட்டையாக ஒரு நாட்டுப் படகில் பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அட்டை

இதனையடுத்து சுமார் 13 மூட்டைகளில் இருந்த சுறா துடுப்புகள் மற்றும் 23 மூட்டைகளில் இருந்த கடல் அட்டைகள் பைபர் படகு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 50 கோடி ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்த கடல் அட்டைகள் மற்றும் சுறா மீன் துடுப்புகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

சுறா துடுப்புக்கள்

அதனைத் தொடர்ந்து அந்த தோப்பின் காவலாளிகளான புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வம் (32) மற்றும் ரஞ்சித் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தோப்பின் உரிமையாளரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த விஜய் ஆனந்த் (40) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன் துடுப்பு உள்ளிட்ட பொருட்கள் உடன் கைது செய்யப்பட்ட செல்வம், ரஞ்சித் ஆகியோரையும் கீழக்கரை வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web